skip to main |
skip to sidebar
தேவையான பொருட்கள்:
பீஃப் - 1/2 கிலோ
தக்காளி - 2
பச்சை மிளகாய் -2
இஞ்சிபூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
சீரகத் தூள் - 1/2 ஸ்பூன்
மல்லி தூள் - 2 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
மல்லி, புதினா - 1/2 கப்
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 1/4 கப்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2
செய்முறை :
1. பீஃபை சுத்தம் செய்து 7 அல்லது 8 முறை தண்ணீர் விட்டு நன்கு அலசிக் கொள்ளவும். தக்காளியை மெல்லிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். மிளகாயை நடுவில் கீறி வைக்கவும். மல்லி, புதினாவை பொடியாக நறுக்கவும்.
2. பீஃபை 1/4 ஸ்பூன் உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து நுரைத்து வந்ததும் வடிகட்டி கொள்ளவும்.
3. குக்கரில் எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளிக்கவும்.
4. பின்னர் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து குழைய வதக்கவும்.
5. பீஃபை சேர்த்து நன்கு பிரட்டி விடவும். தூள் வகைகளை சேர்த்து தூள் வாசம் போகும் வரை பிரட்டி 1/2 கப் தயிர் ஊற்றி 6 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
6. கறி நன்றாக வெந்து தண்ணீர் வற்றி பொரியல் பதமாக இருக்கும். தண்ணீர் அதிகமாக இருந்தால் வற்றும் வரை அடுப்பில் சிம்மில் வைக்கவும்.
கடைசியாக மல்லி, புதினா, கறிவேப்பிலை தூவி நன்கு பிரட்டி விடவும்.
சுவையான பீஃப் பொரியல் தயார். நெய் சாதம், தேங்காய் சாதம் இவற்றுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
பரோட்டா, சப்பாத்தி ஆகியவற்றுடன் சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
பனைநுங்கு - 10
பால் - 1/2 லிட்டர்
சீனி - 4 டேபிள் ஸ்பூன்
ரோஸ் மில்க் எசன்ஸ் - 1 ஸ்பூன்
செய்முறை :
1. நுங்கை தோல் உரித்து கழுவி வைக்கவும்.
2. பின்னர் நீளமான குவளை கொண்டு சிறிய துண்டுகளாக கொத்தி விட்டு கொள்ளவும்.
3. பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்து சீனி சேர்த்து கலந்து வைக்கவும்.
4. ஆறிய பாலில் ரோஸ் மில்க் எசென்ஸ் சேர்த்து நுங்கு துண்டுகளையும் கலந்து ப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும்.
கோடை வெயிலுக்கேற்ற உடலுக்கு குளிர்ச்சி தரும் நுங்கு சர்பத் தயார்.
நுங்கு சீசன் என்பதால் அடிக்கடி செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் :
முருங்கைகாய் - 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
தேங்காய் துருவல் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
சீரக தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
தாளிக்க :
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை :
1. முருங்கைகாயை அலசி விட்டு விரல் அளவு துண்டுகளாக்கி நடுவில் இரண்டாக கீறி வைக்கவும். வெங்காயத்தை மெல்லியதாகவும் நறுக்கி கொள்ளவும். மிளகாயை நடுவில் கீறி வைக்கவும்.
2.தேங்காயை சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும்.
3. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க குடுத்துள்ள பொருட்களை தாளித்து வெங்காயம், மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.
4. பின்னர் தூள் வகைகள் சேர்த்து சிறிது பிரட்டி விட்டு முருங்கைகாயை சேர்த்து 1/4 கப் நீர் சேர்த்து வேக விடவும்.
5. முக்கால் பதம் வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.
எளிதில் செய்ய கூடிய முருங்கைகாய் பிரட்டல் தயார்.
அனைத்து சாத வகைகளுக்கும் பொருத்தமான சைட்டிஷ்.
அசைவம் சாப்பிடுபவர்கள் விரும்பினால் சிறிது இறால், நெத்திலி கருவாடு தாளிக்கும் பொழுது போட்டு செய்தாலும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
சாதம் - 2 கப்
புளி - ஒரு சிறிய உருண்டை
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
வறுத்து பொடிக்க :
வரமிளகாய் - 6
கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
தாளிக்க:
கடுகு - 1/2 ஸ்பூன்
வரமிளகாய் - 2
கடலைபருப்பு - 1 ஸ்பூன்
உளுந்து - 1 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
கறிவேப்பிலை - 2 கொத்து
எண்ணெய் - தேவைக்கு
செய்முறை :
1. வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் சிவற வறுத்து மிக்சியில் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
2. புளியை திக்காக கரைத்து கொள்ளவும்.
3. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
4. பின்னர் புளி கரைசலை ஊற்றி கொதி வந்ததும் வறுத்து பொடித்த பொடியில் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து விட்டு எண்ணெய் மேலே தெளிந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
5. வடித்த சாதத்தை கலவையுடன் நன்கு கலந்து மேலே நல்லெண்ணெய் ஊற்றி 1/2 மணி நேரம் மூடி வைக்கவும்.
நல்லெண்ணெய் வாசத்துடன் புளி சாதம் தயார்.
சாதத்தை நன்கு கலந்து விட்டு விருப்பமான தொடுகறிகளுடன் பரிமாறவும்.
தேவையான பொருட்கள் :
ஆட்டு ஈரல் - 1/4 கிலோ
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
சீரகத் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
மல்லிதழை, புதினா - சிறிது
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
1. ஈரலை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி தூள் வகைகள், உப்பு சேர்த்து பிசிறி வைக்கவும்.
2. தக்காளி, மிளகாயை சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
3. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தக்காளி, மிளகாய் சேர்த்து வதக்கி இஞ்சிபூண்டு சேர்க்கவும்.
4. பச்சை வாசம் போனதும் ஈரல் கலவையை சேர்த்து வேக விடவும். மல்லிதழை, கறிவேப்பிலை சேர்க்கவும்.
5. வேண்டுமென்றால் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து பிரட்டி விடவும்.
6. 5 நிமிடத்தில் வெந்து எண்ணெய் பிரிந்து வந்து விடும்.
சத்தான ஈரல் பொரியல் தயார்.
ஈரல் இரத்த விருத்திக்கு மிகவும் நல்லது.