துருவிய தேங்காய் - 1 கப்
பொட்டுகடலை - 1 கைப்பிடி
வரமிளகாய் - 4 / 5
உப்பு - 3/4 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்து - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
1. தேங்காய், பொட்டுகடலை, வரமிளகாய், உப்பு, 1/2 கப் நீர் சேர்த்து மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
2. சட்னியில் சிறிது நீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
3. பானில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து சட்னியில் சேர்க்கவும்.
சுலபமாக செய்ய கூடிய தேங்காய் சட்னி தயார்.