தேங்காய் சட்னி

0 கருத்துகள்


தேங்காய் சட்னி

தேவையான பொருட்கள் : 

துருவிய தேங்காய் - 1 கப்
பொட்டுகடலை - 1 கைப்பிடி
வரமிளகாய் - 4 / 5
உப்பு - 3/4 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்து - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

1. தேங்காய், பொட்டுகடலை, வரமிளகாய், உப்பு, 1/2 கப் நீர் சேர்த்து மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.


2. சட்னியில் சிறிது நீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.


3. பானில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து சட்னியில் சேர்க்கவும்.



சுலபமாக செய்ய கூடிய தேங்காய் சட்னி தயார்.

வஞ்சிரம் மீன் குழம்பு

0 கருத்துகள்




வஞ்சிரம் மீன் குழம்பு

தேவையான பொருட்கள் :

வஞ்சிரம் மீன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் பொடி - 1  ஸ்பூன்
மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
மீன் மசாலா பொடி - 2 டேபிள் ஸ்பூன் / தனியா தூள் - 2 டேபிள் ஸ்பூன்
புளி - சிறிய உருண்டை அளவு
தேங்காய் பால் - 1 கப்
உப்பு - 2 ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தாளிக்க :
கடுகு - 1/2 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
பூண்டு - 6 பல்


செய்முறை : 

1. மீனை சுத்தம் செய்து 1/2 ஸ்பூன் மஞ்சள் பொடி , 1 ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு அலசி கொள்ளவும்.
2. வெங்காயம்,தக்காளியை மெல்லியதாகவும்,பச்சை மிளகாயை நடுவில் கீறியும் வைக்கவும்.



3. புளியை ஊற வைத்து 1 கப் புளித்தண்ணீர் வருமளவு கரைத்துக் கொள்ளவும்.
4. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க குடுத்துள்ள பொருட்களை சேர்க்கவும்.
5. வெங்காயம் மிளகாய் சேர்த்து நன்கு சிவரும் வரை வதக்கவும்.தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.




6. மஞ்சள் தூள்,மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும்.



7. புளித்தண்ணீருடன், தேங்காய்பால் மீன் மசாலாதூள் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.



8. இந்த கரைசலை குழம்பில் சேர்க்கவும்.மீன் துண்டுகளை சேர்த்து மூடி போட்டு நன்கு கொதிக்க விடவும்.



9. நன்கு கொதித்து மசாலா வாடை அடங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.



சுவையான வஞ்சிரமீன் குழம்பு தயார்.



 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes